தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் துறைசார் தரப்புக்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, March 27th, 2020

நாட்டடில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் இலகுவாக மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர் பிரதிநிதிகள் ஆகியோருடன் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டகளஸ் தேவானந்தா  கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஏற்கனவே இன்று காலை பேருவளை மீனபிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், அங்கு சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை அவதானிதார். அதனை தொடர்ந்து டிக்கோவிற்ற துறைமுகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள், ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களில் இருந்து மீன்கள் இறக்கப்படும் செய்ற்பாடுகளையும் நேரடியாக அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: