டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனு தாக்கல்!

Tuesday, December 12th, 2017

நடைபெவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இவ் வேட்புமனு இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சாவகச்சேரி நகர சபைக்கான கட்டுப்பணத்தை கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியிருந்தது.

இந்த நிலையில் 10 அங்கத்தவர்களை கொண்டதான சாவகச்செரி நகரசபைக்கான வேட்புமனு வேட்பாளர்கள் சகிதம் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யள...
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் ...