சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, September 12th, 2023

வேலணை, சாட்டி கடற்கரை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

வருடம் தோறும் பங்குனி – புரட்டாதி வரையான காலப்பகுதியில் உருவாகின்ற கடல் பாசியை சேகரிக்கும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் கடல்பாசி சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.

000

Related posts:


கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக...
தட்டான்குளம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் - அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ...
மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாகவே ஒவ்வொருவரது செயற்பாடுகளும் அமையவேண்டும் - தோழர்கள் மத்தி...