சமுர்த்தி பயனாளிகளின் நலன்களுடன் உத்தியோகத்தர்களது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
Wednesday, May 29th, 2024
…….
சமுர்த்தி பயனாளர்களுக்கு சிறந்த நன்மைகள் கிடைக்கும் வகையிலும், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் தொழிற் சங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தம் இன்று (29.05.2024) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது யழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இவ்வாறு வலியுறுத்திய அமைச்சர் மேலும் கூறுகையில் –
சுமார் 8 வருடங்களுக்கு மேலாக உரிய முறையில் தெரிவு செய்யப்படாத நிலையில் உறங்கு நிலையில், இருந்த குறித்த தொழிற் சங்கத்தினை மீளவும் செயற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வழங்கி ஆலோசனைக்கு அமைய புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


