சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தினால் இன்னல்கள் களையப்படும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 14th, 2020

எதிர்காலத்திலாவது சந்தர்ப்பங்கள் சரியாக பயன்படுத்தப்படுமாயின் சந்தித்த இன்னல்கள்  அனைத்தும் தொடர்ந்து வரும் சில வருடங்களினுள் தீர்த்து வைக்கப்படும் என்று உத்தரவாதமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக்  கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர்   டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய் போன்ற பிரதேசங்களை சேர்ந்த கட்சியின் வட்டார செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் மக்களை தவறாக வழிநடத்திய தரப்புக்கள்  பல்வேறு கோஷங்களை முன்வைத்த போதிலும் அவற்றை அடைவதற்கான வேலைத் திட்டம் அவர்களிடம் இருக்கவில்லை எனத் தெரிவித்ததுடன் ஈ.பி.டி.பி. யை  பொறுத்த வரையில் தெளிவான வேலைத் திட்டம் இருக்கின்றது என்பதை வரலாறு நிரூபித்து வருவதாவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், ஈ.பி.டி.பி. கட்சியின் வேலைத் திட்டங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், யதார்தத்தினை  புரிந்து கொண்டு மக்கள் ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை பலப்படுத்துவார்களாயின் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும்  தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: