கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, July 24th, 2020

கிளிநொச்சி, கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்திற்கு விஜயம் செய்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த காப்பகத்தின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

சுமார் 400 இற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளர் குடும்பங்களை உறுப்பினர்களாக கொண்ட குறித்த காப்பகத்தினால் கூட்டுப் பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கிளிநொச்சி, கோணாவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சக தமிழ் கட்சித் தல...
டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!