அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !
Thursday, December 17th, 2020கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது
இன்றைய கூட்டத்தில் விவசாயம், கல்வி, பாதுகாப்பு, சிவில் நிர்வாகம், போக்குவரத்து, கடற்தொழில், வீட்டுத் திட்டம், காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.
குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ், நாடாளுமன்றஉறுப்பினர்களான சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், திணைக்களங்கள் சார் அதிகாரிகள் பொது அமைப்பகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுடு தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|