கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

Saturday, June 10th, 2017

கைவேலி புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அருள்மிகு ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவின் கீழான கைவேலி 2ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள பிள்ளையார் ஆலயம் புதுப்பொலிவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் (10) இடப்பெற்றது.

ஆலய நிர்வாகத்தினர் விடுத்திருந்த அழைப்பிற்கு இணங்க, அங்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருவறைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

முன்பதாக, சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, கருவறைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கருவறைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து, அங்கு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, இந்நிகழ்வில் கலந்து கொள்வதானது, மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்குத் தமது பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் தவநாதன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெயராசா கிருபன் ஆகியோரும் உடனிருந்தனர்.

Related posts:

சொந்த நிலங்களை மீட்பதற்கு தமிழ் மக்கள் யாருக்கும் விலை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை - நாடாளுமன்றில் ...
தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்...
கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் ...

இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம் : ஊர்காவற்றுறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் - கௌதாரிமுனையில் அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் ...
வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா உள்ளட்ட அதிகா...