கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, September 15th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களின் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த காலப் பகுதியில் 196 வேலைத் திட்டங்கள் கிடைத்துள்ள நிலையில், இதுவரை 178 வேலைத் திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூரணப்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்களை மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்துவது மற்றும் பூரணப்படுத்தப்படாத வேலைத் திட்டங்களை முன்னகர்த்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். –

இதனிடையே

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் பூரணப்படுத்துவது மாத்திரமல்லாமல், அவற்றை மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்துவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
எமக்கான உணவுத் தேவையை சுயமாக நிவர்த்தி செய்ய வீட்டுத் தோட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் - அ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு - மிருசுவில் புனித நிக்கொலார் ஆலய விச...