கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதிக்கு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, January 12th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்றையதினம் (12)  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குறித்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடுகின்றது.

அந்த வகையில்  கிழக்கு மாகாணத்திற்கு கடந்தவாரம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்  செல்லும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொள்ளவுள்ளதுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.

அத்துடன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வெற்றி வாய்ப்பை மக்கள் உறுதி செய்யும் பட்சத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டுமாணம் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமை பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புலம்பெயர் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் மேம்பாட்டிற்கு உதவவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...
சிந்தன் தோழரின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

யாழ்ப்பாணத்தில் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நடுக்கடலில் இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களிடையே பதற்றம் – வடமராட்சி பிரதேசமெற்கும் மீனவர்கள் போராட...
தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில...