கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் தொழில்சார் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Monday, October 10th, 2022

நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினை சேர்ந்த உயரதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, எதிர்கொள்ளப்படும் தொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தில் உள்ள துறைமுகங்களில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்களின் முன்னகர்வுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

இதனிடையே

காலி மீன்பிடித் துறைமுகத்தில், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தில் உள்ள  ஐஸ் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள அமோனியா வெளியேற்றம் உட்பட்ட குறைபாடுகளை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் ஐஸ் தொழிற்சாலையை வினைத்திறனுடன் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,  மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், ஐஸ் தொழிற்சாலை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளு...
அணுகுமுறைகளே எமக்கான உரிமையையும் தீர்வுகளையும் வென்றெடுத்து தரும் - கட்சியின் தோழர்கள் மத்தியில் செ...

கிடைத்த சந்தர்ப்பங்கள்அனைத்தையும் மக்களது விடியலுக்கானதாக உருவாக்கி வெற்றிகண்டிருக்கின்றோம் - முல்லை...
மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு கட்சியூடான எமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக ...