அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக குழுவின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்!

Saturday, January 9th, 2021

கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னதாக திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் கொட்பே மீன்பிடித் துறைமுகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்

அத்துடன் திருகோணமலை, கொட்பே மீன்பிடித் துறைமுகத்தினை அண்டிய கடற் பிரதேசத்தில் தனியார் முதலீட்டாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொடுவா மீன் வளர்ப்பு பண்ணையின் நிலைமைகள் தொடர்பிலும் நேரில் பார்வையிட்டு  ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியை நோக்காக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணை முதலீட்டில் கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

Related posts:

சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் - செயலாளர்...
தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடடியாக தடை செய்ய அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ் நட...
இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் வருகின்றது திருத்தம் - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம...
யாழ் - கிளிநொச்சி மாவட்ட மக்களின் பூர்வீக நிலங்களுக்களுக்கு இடையூறு - துறைசார் அமைச்சுடன் அமைச்சர் ...
பழைய சட்டங்கள் திருத்தப்படும் - காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்கள...