கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வர்த்தமானி வெளியீடு – சட்ட திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, December 8th, 2022

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சர் டக்ளஸ் தவானந்தாவை சந்தித்து அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த சந்திப்பு இன்று காலை மாளியாவத்ததையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வர்த்தமாணி வெளியீடுகளின் மூலம் மேற்கொள்ளவுள்ள சட்டத் திருத்தங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடற்தொழில் சார்ந்த கற்கை நெறிக்கு பல்கலையில் தனியான பீடம் அமைக்கப்பட வேண்டும்  - நாடாளுமன்றத்தில் டக...
வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் ட...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு - உயர்...