கடமைகளைப் பொறுப்பேற்றார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 13th, 2020

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் நடைபெற்ற 9 ஆவது நாடாளுன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்ற பொதுஜன பெருமுன, ஈ.பி.டி.பி போன்ற பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்துள்ளது.

அதனடிப்படையில், நேற்று (12.08.2020) தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் வழங்கி வைத்தார்.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடிய...
தேயிலையின் தரத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!
இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!