ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல : ஒற்றை ஆட்சியே – பருத்தித்துறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Sunday, January 6th, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதுபோல் ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல அது ஒற்றை ஆட்சியே . வார்த்தை யாலங்கள் தமிழ் மக்களையும் சிங்கள் மக்களையும் ஏமாற்றும் செய்லே என ஈழ மக்கழ் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

பருத்தித்துறையில் நடைபெற்ற கட்டியின் பிரதேச செயற்பாட்டளர்கள் பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போது தென்னிலன்கையில் ஏற்பட்டுல்ல அரசியல் இழுபறி நிலமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட விதமானது தமிழ் மக்களை மேலும் பல சிக்கல்களுக்குள்ளேயே கொண்டுசென்றுள்ளது.

குறித்த அரசியல் குழப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்படாது அதை தமது சுயநலன்களை முன்னிறுத்தி ஒருபக்க சார்பக செயற்பட்டமையால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பம் மீண்டும் அடிபட்டு போகும் நிலையே காணப்படுகின்றது.
அந்தவகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றுதருவதாக கூறி பொய்யான கருத்துக்களை பர்ப்பச்செய்து மக்களை ஏமாற்று செயற்பாடுகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மேற்கொடுவருகின்றது.

அந்தவகையில் தற்போதும் ஒருமித்த நாடு என்றால் சமஷ்டி என்று கூறி மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர்.
ஆனால் ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல. அது ஒற்றை ஆட்சியே என நாம் ஆரம்பத்திலுருந்தே கூறிவருகின்றோம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார் .

Related posts:


அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் - ஆளுநரிடம் டக்ளஸ் தேவ...
கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுத்தராது – உரும்பிராயில் டக்ளஸ் ...
எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. - தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ள...