எமது மாணவர்களுக்குச் சென்றடையக்கூடியதான கல்வி வாய்ப்புக்கள் சிதைக்கப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 23rd, 2017

எமது நாட்டில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு இடையூறுகள் காரணமாக, எமது மாணவர்களுக்கு சென்றடையக்கூடியதான தற்போதைய கல்வி முறைமையின் வாய்ப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிததுள்ளார்.

இன்றைய தினம் கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலம் தெரிவிக்கையில் –

குறிப்பாக அரசியல் தலையீடுகள் ஆசிரியர் தெரிவு முறையில் முரண்பாடுகள். ஊழல், மோசடி, வீண்விரயங்கள், து~;பிரயோகங்கள். கற்பித்தல் முறையில் நவீனத்துவத்திற்கான வாய்ப்புகளின்மை. பரீட்சைகளை மையப்படுத்திய கல்விக் கொள்கை. ஆன்மீகம், பண்பாடு, வரலாறு போன்றவை கல்வி முறைமையில் புறக்கணிக்கப்படுகின்றமை அல்லது திரிபுபடுத்தப்படுகின்றமை. போன்ற காரணிகள் பொதுவாகவே எமது மாணவர்களுக்குரிய கல்;விக்கான வாய்ப்பினை ஒழுங்குறப் போய்ச் சேராததற்கான காரணிகளாகக் கூறப்படும் நிலையில், எமது நாட்டினது சமூக மட்டத்தில்,

வறுமை காரணமாக மாணவப் பருவத்தினர் உழைப்பில் ஈடுபடுகின்ற பொருளாதார நிலைமை வளரா சமூக ஒடுக்கு முறைகள் மற்றும் இன ரீதியலான புறக்கணிப்புகள் காரணமாக கல்விக்கான போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றமை.

பண்பாட்டு, கலாசார அடிப்படையில் தவறான பார்வைகள், கோளாறுகள் காரணமாக கல்வியைத் தொடர இயலாமல் இடைநடுவில் விலகல். போன்ற காரணிகளும், தவறான கல்விக் கொள்கை காரணமாக கல்வியைத் தொடர இயலாமை மற்றும் உயர் கல்வி மறுக்கப்படும் நிலைமை எனக் காரணிகள் தொடருகின்றன.

இத்தகைய தடைகள் இனங்காணப்பட்டு, அவை தகர்த்து எறியப்படும் வரையில் எமது கல்வித் திட்டமானது எமது மாணவர்களுக்கு ஒழுங்கான பயனைத் தர மாட்டாது என்ற கருத்தே எமது சமுதாய மட்டத்தில் நிலவி வருகின்றது – என்றார்.

01101404

Related posts:

வடக்கில் நகரங்களாக வளர்ச்சிபெற்ற பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்த வேண்டும். நாடாளுமன்றத்தில் டக...
எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் - டக்ளஸ்...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறை...

கஜேந்திரன்குமார் குண்டர்களையும், வாள் வெட்டுக்குழுவையும்  நம்பி அரசியல் செய்கின்றார். ஈ.பி.டி.பி குற...
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி: அமைச்சர் டக்ளஸ் த...
வேலைத் திட்டங்கள் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!