எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Saturday, January 13th, 2018

பளை நகரப்பகுதியில் உள்ள ஒருதொகுதி வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டார்.

பளை பகுதிக்கு இன்றையதினம் (13) விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பளை நகர்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தகர்களுடன் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது வர்த்தகர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக தாம்  நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சந்தைப் பகுதியில் மின்சார வசதிகளோ அன்றி மலசலகூட வசதிகளோ இன்மையால் பல அசௌகரியங்களை எதிர் கொள்ளவேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்ததுடன் மின்சாரம் இன்மையால் சந்தைப் பகுதியில் சிலர் இரவு நேரங்களில் மதுபானம் அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதால் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும்  டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்திருந்ததுடன் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வர்த்தகர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சரியான முறையில் பயன்படுத்தி எமது வீணைச் சின்னத்தை வெற்றிகொள்ள வைப்பதனூடாக  இலகுவான முறையில் தீர்வுகாண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை - யாழ் – கிளிநொச்சி இடையே அடுத்த வாரம்முதல் விசேட புகையிரத ச...
யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்த...
கராட்டி போட்டியில் தேசிய  ரீதியில் 3 ஆம் இடம் -  மாணவியை பாராட்டி கௌரவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் ந...

பிறக்கும் புத்தாண்டில் மாற்றத்தை விரும்பும் எம் மக்களுக்கு புது நிமிர்வை கொடுப்போம் - புத்தாண்டு வாழ...
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி ...