எதிர்வரும் திங்களன்று 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் டக்ளசிடம் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022

விவசாயிகளிடம் இருந்து 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்தபின்னர் குறித்த தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புககளுடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

இதன்போது, நெல் கொள்வனவிற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கமக்காரர் அமைப்புக்களினால் கேட்கப்பட்ட நிலையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதன்போது, “எதிர்வரும் திங்கள்கிழமை குறித்த அமைச்சரவை தீர்மானம் கிடைக்க இருக்கிறது.

அதன் பின்னர் 75 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும்” என்று அமைச்சர் மஹிந்தானந்தா கூறியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடு...
பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் - அமைச்சர் ...
இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா - அ...

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – டக்ளஸ் எம்.பி. குற்றச்சாட்ட...
மதுவரிக் கட்டளைச் சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
நீர்வேளாண்மை திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் அமைச்சர் ...