ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 24th, 2020

கொறோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக ஆழ்கடலில் இருந்து பிடித்து வரப்படுகின்ற கடலுணவுகளை இறக்குவதற்கும் அவற்றை ஏனைய இடங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கும் முடியாமல் இருப்பதாகவும் இதன் காரணமாக பெருந்தொகையான நஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருப்பதாகவும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து டிக்கோவிற்ற பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைகளையடுத்து ஆழ்கடலில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும் செயற்பாடுகளை தினசரி காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை (ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும்) மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் கடற்றொழிலாளர்கள் நாடளாவிய ரீதியில் தொழிலில் ஈடுபடவும் அதேபோன்று கடற்றொழில் சார் அடையாளத்தை உறுதிப்படுத்துபவர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் தொழிலசார் போக்குவரத்தில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:


நீதிமன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கை வேண்டும்!
காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்...
தமிழ் மக்களின் பொருளாதார சிக்கல்களையும் கருத்தில் எடுத்த - சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வரவு செ...