உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023

காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனதும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இணுவில் மத்திய கல்லூரியில் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே மற்றொரு நிகழ்வாக யா/மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் வடக்கு மாகாண நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதியையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்

அத்துடன் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: