ஈ.பி.டி.பி. கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் சர்வலோக நிவாரணியாக அமையும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 21st, 2020

நடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி என்பது தமிழ் மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கான சர்வலோக நிவாரணியாக அமையும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா கற்குளம் 1 பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பது மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே உருவாக்கப்பட்டது.

அதற்கான வேலைத்திட்டமும் வழிமுறையும் ஈ.பி.டி.பி. கட்சியிடம் இருக்கின்றது. எனினும்  அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான மக்கள் பலத்தினையே எதிர்பார்க்கின்றோம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எமது கரங்கள் பலப்படுத்தப்படுமாக இருந்தால் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தொடர்ந்து வருகின்ற சில வருடங்களில் நிறைவேற்ற முடியும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் ஈ.பி.டி.பி. கட்சிக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்குகள் அனைத்து பிரச்சினைகளுக்குமான சர்வலோக நிவாரணியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி
மாணவக் கண்மணிகளின் எதிர்காலம் சிறப்புற அமைய வாழ்த்துகின்றேன் - சித்தியெய்திய மாணவர்களுக்கான  வாழ்த்த...
நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...

விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்...
வடக்கில் உப தபாலகங்களுக்கு காணி இருந்தும் கட்டிடங்களை அமைத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது ஏன் - நாடாளுமன...
அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் - டக்ளஸ் ...