இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!.
Monday, October 2nd, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த அவர்களும் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின்போது மீன்பிடிக்கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் வியாபார நடவடிக்கைகள் மற்றும் ஊக்குவிப்புச் செய்து கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் இரு செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க அவர்களுடன் அமைச்சு வேலைகளின் முன்னேற்றங்கள் மற்றும் விரைவாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் - டக்ளஸ் தேவானந்தா சுகா...
தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் -; செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
ஈ.பி.டி.பியின் அரசியல் பலம் வலுப்பெறும்போது தமிழ் மக்களின் அபிலாசைகளு விரைவில் ஈடேறும் - செயலாளர் ந...
|
|
|


