இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு!
Wednesday, June 29th, 2022வடக்கிற்கான 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சமகால அரசியல் நிலைவரங்கள், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், குறிப்பாக கடலட்டை உற்பத்தி உட்பட நீர்வேளாண்மை எனப்படும் பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவுகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஜப்பானிய துாதுவருக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜப்பானின் உயரிய தொழில்நுட்ப அனுபவங்களும் – உதவிகளும் கிடைக்குமாயின், எமது மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் எனவும் தெரிவித்துள்ளார். – 29.06.2022
Related posts:
ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னெருவருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவேன் - முல்லையில் அமைச்சர் தேவானந்த...
முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!
|
|