இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 29th, 2019

மக்களது தேவைகள் அவர்களது பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது தான் மக்கள் பிரதினிதிகளின் கடமை. அதை நான் சரியாகவே முடிந்தளவு செய்து வந்திருந்திருக்கிறேன் என கடல்தொழில் மற்றும் நிரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரணைமடு நன்னீர் மீன்பிடி இறங்குதுறை பகுதிக்கு நேரில் சென்று பார்வைவிட்ட அமைச்சர் நன்னீர் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிதிகளை சந்தித்க்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தபின் கருத்து தெரிவிக்கையிலையே அவர் இவ்வறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நீங்கள் எதிர்கொண்டுவரும் சாதாரண பிரச்சினைகளைக் கூஅ தீர்க்கப்படமக்கு உங்களது வாக்குகளால் அதிகாரத்தை பெற்ற பிரதினிதிகளின் குறைபாசுகளும் ஆழுமையின்மையுமே காரணம்.

உங்களது அவசியமான பிரச்சினைகள் தீர்க்க வேண்டியதும் தீர்க்கப்பட வேண்டியதுமானவை.

குறிப்பாக மீன்குஞ்சுகள் குளத்தில் விடும்.காலம் குறித்த பிரச்சினைக்கு தைமாதம் அல்லது மாசி மாத முற்பகுதியில் தீர்வு காணப்படும்.

அதுபோல குளம் வான் பாயும்போது மீன் குஞ்சுகள் வெளியேறுவதை தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

நான் பொய்த்தனமான அரசியல் செய்வது கிடையாது.மக்களை அலையவிடுவதும் எமது நோக்கமல்ல.

நீங்கள் ஒவ்வொருவரும் நிரந்தரமான பொருளாதாரத்துடன் வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள வழிவகைகள் எய்து தர்ப்படும்.

அந்தவகையில் உங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து மற்றவர்களிடம் கையேந்தாத வகையில் கௌரவமான முறையில் வாழ்வதற்கான சூழ்னிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்பதே எமது நோக்காகும்.

அதை நாம் உருவாக்கித்தர உங்களது ஆதரவுப்பலம் எமக்கு வேண்டும் என்றார்.
இதனிடயே
இப்பகுதியில் சுமார் 138 வள்ளங்கள் இப்பகுதியில் உள்ளதாகவும் இவற்றை பாதுகாப்பாக கட்டுவதற்கு கூட வசதிகள் அற்ற நிலைகள் காணப்படுவதாகவும், கடற்றொழிலாளர்கள இளைப்பாறுவதற்கு
பொதுவான கட்டடம் இன்மை கணப்படுவதாகவும், குளத்தின் நீர்மட்டம் உயரும் காலங்களிலும் வறட்சியான காலப்பகுதியிலும் மீன் பிடிபாடு குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் மட்டுமல்லாது அவர்களை நம்பி வாழும் குடும்பங்களினதும் பொருளாதார் நிலை பாதிக்கப்படுகின்றது. இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருப்பது சிறப்பானது ...
அசாதாரண சூழலை எதிர்கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் அவசர கலந்துரையாடல் - மீன்களை களஞ்சிய...
காக்கைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறு கோரிக...

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...
மன்னார் கோந்தைப்பிட்டி முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை -...