இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!
Wednesday, April 7th, 2021
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகைதந்த பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், அமைச்சரின் கவனத்திற்கு குறித்த விடயத்தினை கொண்டுவந்தனர்.
இதுதொடர்பான விபரங்களை ஆதாரங்களையும் பெற்றுக்கொண்ட அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
Related posts:
இயல்புச் சூழலை பாதிக்கும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை!
ஆட்சி தற்போது யார் கையில் இருக்கிறது? - டக்ளஸ் எம்.பி. கேள்வி!
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
|
|
|


