இடமாற்றம் பெற்றுத் தாருங்கள்: முலைத்தீவில் பணிபுரியும் பொருளாதார உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் கோரிக்கை!

Saturday, December 7th, 2019

முல்லைத்தீவு மாவட்டத்த்கில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில் இதுவரை இடமாற்றம் வழங்கப்படாமையால் பாதிக்கப்பச்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றது.
யாழ் மாவட்டத்தில் இருந்து நியமனம் பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்த்கில் கடந்த 7 ஆண்டுகளாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றிவரும் நிலையில் தமக்கு வழமையான இடமாற்றம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அதில் தாம் உள்வாங்கப்படவில்லை. இதனால் தாம் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது நியாயமான பிரசினைகளை கருத்தில் கொண்டு இடமாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்சு தாருங்க என கோரிக்கை விடுத்தனர்.
குறித்த உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்ட அமைச்சர் அது தொடர்பில் காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தர முயறைப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...
மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. - தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ள...

காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
அமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி ம...
நெருக்கடிகளிலிருந்து இலங்கையர்களாகிய நாம் விரைவில் மீண்டெழுவோம் - சித்திரைப் பெருநாள் வாழ்த்துச் செய...