ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, July 13th, 2021

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின் ஆறுமுகம் திட்டத்தினை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த திட்டம் தொடர்பாக 1962 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும்,  ஆனையிறவு கடல் நீரேரியில் பருவ கால மீன்பிடித தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டடிருந்தது.

இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி ஆனையிறவு கடல் நீரேரியில் 23 வீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு, புதிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி,  கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்பாசனப் பணிப்பாளர் த. இராஜகோபு அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி விழா...
கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்திய...
வடகடல் நிறுவன நிர்வாகத்தில் மாற்றம் – இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஊழியர்களிடம் அ...

விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...
கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள்...
கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...