அம்பாறை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களுடன் சந்திப்பு!

Friday, April 7th, 2023

அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அப்பிரதேசத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்கு வனவள ஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்து இருப்பதாக தெரிவித்த பிரதேச மக்கள், மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் தடை காரணமாக குறித்த குளத்தில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படாமையினால், பெருமளவு மீன்கள் இயற்கையாக இறந்து வருவதாகவும் அதனால் குறித்த பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் கடற்றொழில் அமைச்சரிடம் பிரதேச மக்களினால் முறையிடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக புதுவருட விடுமுறைக் காலம் நிறைவடைந்த பின்னர் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துலையாடி உரிய நடவடிக்கை யேற்கொள்ளப்படும் என்று  இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். – 07.04.2023

000

Related posts:

“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெ...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – கடற்றொழில் மேம்பாடுகளுக்கு உபகரண உ...
வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு ...

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர...
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் நிறையவே உள்ளன - வவுன...
ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன - அமைச்சர் டக்ளஸ் தே...