அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 15 வருடகால கனவை நனவாக்கிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள்!

Wednesday, May 15th, 2024


……
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின்  மைதானத்திற்கு செல்லும் பிரதான பாதையை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்

முன்பதாக பாடசாலையின் மைதானத்திற்கான பிரதான பாதையில் அமைந்துள்ள  இராணுவ முகாம்  மாணவர்களின் மைதானச் செயற்பாடுகளுக்கு அசௌகரியமாக இருப்பதாக பாடசாலை சமூகத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கை தொடர்பாக அமைச்சர் முன்னெடுத்த தொடர் நடவடிக்கையின் பயனாக, இராணுவ முகாமின் ஒரு பகுதியை விடுவித்து மைதானத்திற்கான பாதையை வழங்குவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவத்தினரால் விடுவிக்கப்படவுள்ள பகுதியை இன்று பார்வையிட்டச் சென்ற  அமைச்சரை வரவேற்ற, குறித்த பகுதிக்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெவர்த்தன, சம்மந்தப்பட்ட பகுதிகளை அமைச்சருக்கு காண்பித்தார்.

இதன் மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் 15 வருட கனவு நிறைவேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை - நாடாளுமன்றில் டக்...
பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

வட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும் - நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியு...
அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் - செயலாளர் நாயகம் ...
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகா...