அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் அவசர சந்திப்பை மேற்கொண்ட கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன்!

Monday, October 12th, 2020

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று அண்மைக் காலமாக வலியுறுத்தப்பட்டு வருபவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், இன்றையதினம் கறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று (12.10.2020) காலை குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: