அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Friday, May 28th, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்டாலும் அரசாங்கத்தால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய வேண்டும்.

அதற்காக எம்மை நோக்கி வருகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினையும் பாதுகாத்துக் கொண்டு, முன்னோக்கி நகர வேண்டுமே தவிர, முடங்கியிருக்க வேண்டாம் என ஈ.பி.டி.பி யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு, கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஆலோசனை வழங்கினார்.

மாநகர சபையின் செயற்பாடுகளை வினைத் திறனுடன் கொண்டு செல்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இன்று யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
உதயநகர் பகுதி சிறார்களின் நன்மை கருதி ஆரம்ப பாடசாலை – வடபகுதிக்கு தேவையான கோழித் தீவனங்களை உடனடியாகப...
தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து...