அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
Monday, December 4th, 2017வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. சுகாதாரத் தொண்டர்களாக கடந்த அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களிலிருந்து பணிபுரிகின்ற சுமார் 820 சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். இவர்களில்; தகைமை வாய்ந்தவர்கள் – அனுபவசாலிகள் பலர் இருக்கின்றனர். அவர்களை முதற்கட்டமாக நிரந்தரமாக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஏனைய தகைமை கொண்டிராதவர்களுக்கு அத் தகைமையினை அவர்கள் பூர்த்தி செய்கின்ற வரையில் ஒரு கால அவகாசத்தனை வழங்கி அவர்களையும் உள்ளீர்க்க முடியும் என தெரிவித்துள்ளார் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|