அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கரங்களில் அதிகாரங்கள் சிக்கியமையே இன்றைய நிலைக்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 4th, 2020



அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரங்களை கொடுத்தமையினால் இன்று மக்கள் கையறு நிலையில் இருக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக் காட்டியுள்ளார்.

அச்செழு, ஒற்றைப் பனையடி பிரதேச மக்களினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட மக்களினால் தங்களுடைய பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகள், அபிவிருத்தி புறக்கணிப்புக்கள் உட்பட பல்வேறு விடயங்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுதொர்டர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் அதிகாரங்களை கையில் வைத்திருந்தவர்களின் செயற்திறன் இன்மை காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ள போதிலும் அதிகாரங்களை கையில் வைத்திருந்த தரப்புக்களை குறைகூற த் தயாராக இல்லை எனவும் மாறாக, தவறானவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை தெரிவு செய்த மக்களையே குற்றஞ்சாட்டுவதாக தெரிவித்தார்.

எனவே, நடைபெறவுள்ள தேர்தலிலாவது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: