சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/446246-child-labour.jpg)
சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா குறிப்பிட்டார்.
சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் 1929 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.கட்டாயக்கல்வி கிடைக்காத சிறுவர்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா மேலும் குறிப்பிட்டார்
Related posts:
குண்டுவெடிப்பின் எதிரொலி: இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்!
சாட்சிய பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை - நாடாளுமன்ற தெரிவுக்குழு!
உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
|
|