முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/01/Pervez-Musharraf.jpg)
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை இரத்து செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசதுரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், அவரது மரண தண்டனை இரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது.
Related posts:
உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகை வைக்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்!
கட்டுப்பாட்டை இழந்த ரொக்கெட்! பூமியைத்தாக்கும் ஆபத்து - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலத்திரனியல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் - ஒடிசா விபத்துக்கு காரணமானவர்கள்...
|
|