அமெரிக்காவையும் புரட்டிப்போட்ட மத்யூ சூறாவளி!
Monday, October 10th, 2016
அமெரிக்காவின் தென் கிழக்கில் மத்யூ சூறாவளியால் பலியானோரின் எண்ணிக்கை 15 -ஆக உயர்ந்துள்ளது.
பெரியதொரு வெள்ளப்பெருக்கால் துன்புற்ற வடக்கு கரோலினாவில், ஏழு பேர் பலியாகியுள்ளனர்.வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகின்ற பல இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேத்யூ சூறாவளி தற்போது புயலாக தரம் கீழிறங்கி கடலை நோக்கி செல்கிறது.இந்த சூறாவளி ஹேய்ட்டியில் ஏற்படுத்திய பேரழிவின் முழுமையான பாதிப்புகள் இன்னும் உறுதியாக தெரியவில்லை.
அங்கு 900 -க்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர். அங்குள்ள நிலைமை சமாளிக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்ற உதவி பணியாளர்கள், உணவு, நீர் மற்றும் உறைவிட வசதி போன்ற உதவிகள் மிகவும் தேவைப்படுவதாக கூறியுள்ளனர்
Related posts:
புதிய வாழ்வை தொடங்க வட கொரியாவை விட்டு வாருங்கள்- தென் கொரிய!
காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 95 பேர் பலி!
ஜெருசலேம் விவகாரம்: காஸா எல்லையில் தொடரும் பதற்றம்!
|
|