மண்சரிவு – கொலம்பியாவில் 17பேருக்கும் அதிகமானோர் பலி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/download-1-19.jpg)
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வீடுகள் கொண்ட தொகுதியில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பலர் மண்சரிவிற்குள் புதையுண்ட நிலையில், 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிலர் மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related posts:
அடுத்த மாதம் அமெரிக்க - சீனாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை!
நாங்கள் துருக்கிக்கு அனுமதி வழங்கவில்லை - அமெரிக்கா!
இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன - சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டு!
|
|