பிளாஸ்டிக் நுண் மணிகள் பயன்படுத்த தடை: பிரித்தானிய அரசு திட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/160215163737_microbead_950x633_thinkstock_nocredit.jpg)
அழகு சாதனம் மற்றும் சுய பராமரிப்பு பொருட்களில் பிளாஸ்டிக்கால் ஆன நுண் மணிகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
சுத்திகரிப்பு மற்றும் தொழிற்சாலை சாதனங்களில் நுண் மணிகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கவும் பரிசீலித்து வருகிறது.
இந்த நுண் மணிகள் இறுதியாக கடலில் கலக்கும் போது, உணவு சங்கிலிக்குள் நுழைந்துவிடுகிறது.இதனால், கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அரசின் இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
Related posts:
கட்டார் விடயம் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் எடுத்துள்ள முடிவு!
சீனாவில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட அணை - 140 பேர் பரிதாபமாக பலி!
அமெரிக்க வான் பரப்பில் பறந்தது உளவு பலூன் அல்ல - ஆகாயக் கப்பல் - சீனா விளக்கம்!
|
|