பயிற்சியாளராக வராமைக்கான காரணத்தினை வெளியிட்டார் மஹேல!

Thursday, April 27th, 2017

முழு நேர பயிற்சியாளராக இருக்க தான் இன்னும் திறமைப்படவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘மும்பை மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனும் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பயிற்சியாளராக கைகோர்த்துள்ளமை குறித்தும் இலங்கை கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக சேராமை ஆகியவை குறித்தும் மஹேலவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டது.

குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்;

“நான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லை. இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் குறுங்கால ஒப்பந்தங்களையே மேற்கொண்டுள்ளேன். சுமார் 18 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி முழுநேர பயிற்சியாளராக மாறுவதென்பது உண்மையிலேயே கடினமானதொன்று.. தற்போது எனது பொறுப்பு எனது குடும்பத்தினை கவனிப்பதே.. அவர்களுடன் நேரத்தினை ஒதுக்க வேண்டியது எனது கட்டாயக் கடமைகளுள் ஒன்றாகும். இலங்கை அணி குறித்து கூறுவோமாயின் அவர்களுக்கு சிறந்ததொரு பயிற்சியாளர் இருக்கிறார்… எவ்வாறாயினும் நடைமுறையிலுள்ள முறைமைகளில் இருந்து தூரமாகி இருப்பது சாலச் சிறந்தது என நினைக்கின்றேன்…”

Related posts: