“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடர் – அதிக அடிப்படை விலையில் மாலிங்க!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/10/download-6-6.jpg)
இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அணிக்கு 100 பந்துகள் கொண்ட “த ஹன்ரட்” என்னும் புதிய வகையிலான கிரிக்கெட் தொடர் ஒன்றை அடுத்த ஆண்டு நடாத்தவுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் இந்தவாரம் நடைபெறவுள்ள நிலையில், ஏலத்தில் பங்கெடுக்க இலங்கையினை சேர்ந்த 24 கிரிக்கெட் வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வீரர்கள் ஏலத்தில் அதிக அடிப்படை விலையில், பங்கெடுக்கும் இலங்கை வீரராக நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க காணப்படுகின்றார். அந்தவகையில், லசித் மாலிங்கவின் அடிப்படை விலையாக 125,000 யூரோக்கள் (இலங்கை நாணயப்படி 2.5 கோடி ரூபா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
கால் இறுதிக்கு 10 முறை தகுதிக்கு பெற்ற முதல் வீரர் ஜோகோவிச் !
இலங்கை படுதோல்வி !
உலகக்கிண்ண கால்பந்தாட்டம் - பெனல்டியில் வென்ற குரோஷியா கால் இறுதிக்குத் தகுதி!
|
|