தனஞ்செய டி சில்வா அதிரடி: ஜிம்பாப்வேயை பந்தாடிய இலங்கை!!

Tuesday, November 15th, 2016

ஜிம்பாப்வேயில் இலங்கை, ஜிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.

இதில் ஹாராரேவில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே திணறி வந்தது. இந்நிலையில் அந்த அணி 1.3 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அந்த அணி சார்பில் பீட்டர் மோர் அதிகபட்சமாக 47 ஓட்டங்களும், அணித்தலைவர் கிரிமர் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.இலங்கை அணி தரப்பில்,குணரத்னே 3 விக்கெட்டுகளும், குலசேகரா, சுரங்க லக்மல், நுவன் பிரதீப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது.தொடக்க வீரர் குஷால் பெரேரா (21) நிலைக்கவில்லை. அடுத்து வந்த நிரோஷன் டிவெல்ல (41) நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தார்.

மற்றொரு தொடக்க வீரர் தனஞ்செய டி சில்வா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.இதனால் இலங்கை அணி 24.3 ஓவரிலே 2 விக்கெட் மட்டும் இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்செய டி சில்வா 78 ஓட்டங்களும், குஷால் மெண்டிஸ் 12 ஓட்டங்கள் எடுத்தனர்.இந்த தொடரில் நாளை மறுநாள் (16ம்திகதி) நடக்கும் போட்டியில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (5)

Related posts: