சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்!

Thursday, March 23rd, 2017

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகிய ஐந்து பேரையும் இடைநீக்கம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஐந்து வீரர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார். சூதாட்டத்தில் சிக்கிய முகமது இர்பானும், கலாத் லத்தீப்பும் எப்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். சூதாட்டம் தொடர்பாக சர்வதேச புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

Related posts: