850 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைக்க நடவடிக்கை – வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் !

வடபகுதியில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸாரை புதிதாக சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.
18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைந்துகொள்ள முன்வரவேண்டும்.
இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினருமே உள்ளனர்.
இதனால் மேலதிக பொலிஸார் எமக்கு தேவையாக இருக்கின்றனர். இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபரை வடக்கு ஆளுநருடன் இணைந்து சந்தித்து பேசவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
|
|