729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று அழிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/heroinee.jpg)
நாட்டில் கைப்பற்றப்பட்ட 729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை சப்புகஸ்கந்தையில் உள்ள களஞ்சியசாலை தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(01) அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த நடவடிக்கைக்கான அரச இரசாயண பகுப்பாய்வின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளல் என்பன நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவஆராச்சி தெரிவித்துள்ளார்.
நீதவான்கள் முன்னிலையில் இந்த கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஐரோப்பாவின் அதிக சொகுசு கப்பல் இலங்கை வருகை!
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதா...
அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு!
|
|