23 ஆண்டுகளில் இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கை உயரும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/06/images-1-3.jpg)
சிறிலங்காவின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால் அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று நிதியமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
1981 ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 6.6 வீதமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு இது 12.4 வீதமாக அதிகரித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 15.5 வீதமாக உயர்ந்தது. இந்நிலை தொடர்ந்தால் 2041 ஆம் ஆண்டில் சனத்தொகையில் 24.8 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர்.
Related posts:
கனடா விபத்தில் வேலணையைச் சேர்ந்த வயோதிபப் பெண் பலி!
குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா கைது!
தலைநகரின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்த...
|
|