15 – 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி – ஒரு டோஸ் மாத்திரமே வழங்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட குழு அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/10/download-14.jpg)
15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட தேக ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தும் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் தொற்று நோய் தொடர்பான விசேட குழுவினால், சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு பைசர் ஒரு மருந்தளவை மாத்திரம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
27 பவுண் நகை வடமராட்சி துணிகர திருட்டு!
ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்!
கடந்த 24 மணி நேரத்தில் 42 கொவிட் மரணங்கள் - நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது!
|
|
ஸ்ரான்லி வீதி புகையிரதக் கடவை மீது மோதியது பட்டா ரக வாகனம் - 15 நிமிடங்கள் தடைப்பட்டது போக்குவரத்து.
சீன அரசு உதவி - குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுக...
ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் - அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்களுக்கு ப...