முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கைது!

Tuesday, October 1st, 2019

ஜனாதிபதியால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு மின்சார லிப்டிற்குள் சேவை செய்த சமரகோன பண்டா என்பவரை கடுமையாக தாக்கி, அச்சுறுதித்திய குற்றச்சாட்டில் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளர்.

உயிர்த்த ஞாயிறு தாக்கதல் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி பதவி விலகுமாறு அறிவுறுத்தியிருந்தார். எனினும் அவர் பதவி விலக மறுத்தமையினால் அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: