இன்றுமுதல் கடவுச்சீட்டு கட்டணத்தில் மாற்றங்கள்!

Saturday, June 1st, 2019

கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இன்றுமுதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் சேவையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூபா 10,000 இல் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் ரூபா 2000 இல் இருந்து ரூபா 2500 ஆக அதிகரிக்கப்படுகின்றது.

ஒரே நாளில் விநியோகிப்பதற்கான கட்டணம் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கான கட்டணம் 500 இல் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

Related posts:


இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீக்குவதற்கு டக்ளஸ் தே...
வெளிநாட்டு உதவிகள் எதுவும் எமது நாட்டிற்குக் கிடைக்கவில்லை - பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமை” - நடைமுறைக்கு வரவுள்ளதாக மோட்டார் போக்குவர...