அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ள மகிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிவிருக்கும் சகல வேட்பாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. குறித்த சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவில், இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள், கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் சுயேட்சைக்குழுக்கள், போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளோர், அக்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகளே இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திட்டங்கள், விதிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் செயற்பாடுகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது - சைய்த் அல் ஹுசைன்!
போனி புயல் - பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி!
உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|