ஹம்பாந்தோட்டை துறைமுகம்: குத்தகைக்கு கொடுப்பதால் பல நன்மைகள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/4683fed764a06a377249d96f8ad1fc20_XL.jpg)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குகின்றமை தொடர்பாக தேசிய ஊழியர்சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
பயனற்ற நிலையில் காணப்பட்ட இந்த துறைமுகம் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சுமையாக இருந்ததாகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் துறைமுக ஊழியர்கள் கடனில் இருந்து முற்றாக விடுபடுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு இதன் மூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இதனை கருத முடியும்.அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கான புரட்சிகர மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறைமுக ஊழியர்களுக்கும் தேசிய ஊழியர்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
Related posts:
பல்கலை கல்விசாரா ஊழியர்களுடன் இன்று பேச்சு!
தேர்தல் சீர்திருத்தத்திற்கான இறுதி முடிவு எதிர்வரும் 15இல் வெளிவரும்!
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அச...
|
|